வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (08:20 IST)

டி 20 அணிக்கு ரோஹித், கோலி வேண்டாம்… ரவி சாஸ்திரி தடாலடி கருத்து!

சமீபத்தில் நடந்த டி 20 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய டி 20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அணியை ஹர்திக் பாண்ட்யாதான் வழிநடத்தி வருகிறார். இதனால் விரைவில் இந்திய டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டி 20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் “இந்திய டி 20 அணிக்கு இனிமேல் கோலி, ரோஹித் ஷர்மா தேவையில்லை. அவர்களின் ஆற்றலை நாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களை டி 20 அணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.