தொடர்புடைய செய்திகள்
- 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!
- நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!
- ஸ்மார்ட் வாட்சை அடுத்து ஸ்மார்ட் மோதிரங்கள்.. சாம்சங் கேலக்ஸி அறிமுகம்..!
- விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!
- நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கு.. ஆனா எங்ககிட்ட ஆதாரம்தான் இல்ல! - கனடா பிரதமர் ஒப்புதல்!
ரச்சின் ரவீந்தரா சதம்!… வலுவான நிலையில் நியுசிலாந்து!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.
இதனை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் நேற்றைய ஆட்டமுடிவில் சேர்த்திருந்தனர்.
இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 352 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். ஒன்பதாவது வீரராக இறங்கிய டிம் சவுத்தி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.