1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (21:11 IST)

இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரரானார் பதும் நிசங்கா

சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களே ஒரு இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்த  நிலையில், இந்த  24   ஆண்டு சாதனையை பதும் நிசங்கா முறியடித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி  இன்று நடைபெற்றது. 
 
இலங்கையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிரடியாக விளையாடிய இலங்கை வீரர் பதும் நிசங்கா 210 ரன் எடுத்து, இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
 
கடந்த 2000 ஆம் ஆண்டு சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களே ஒரு இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்த  24   ஆண்டு சாதனையை அவர் முறியடித்துள்ளார்.