1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2015 (21:19 IST)

’எங்களுடன் விளையாடாவிட்டால் டி 20 உலக கோப்பையை புறக்கணிப்போம்’ - பாக். கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

இந்திய அணி எங்களுடன் விளையாடாவிட்டால் ‘20 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்து உள்ளது.
 

 
இது குறித்து கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்து வித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பிறகு பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.
 
இத்தகைய சூழலில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டாம் என்றுதான் எங்களது அரசு சொல்லும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.