Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்காக முதல் தொடர் வெற்றி – நடராஜன் டிவிட்டரில் நெகிழ்ச்சி!

Updated: திங்கள், 7 டிசம்பர் 2020 (10:35 IST)
இந்திய அணியில் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இந்திய அணி டி 20 தொடரை வென்றது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 தொடரையும் வென்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த நடராஜன், இரண்டாவது போட்டியில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆஸி அணி 194 ரன்கள் குவித்த இன்னிங்ஸில் நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார் நடராஜன். அதில் ‘என் நாட்டுக்காக நான் கலந்துகொண்ட முதல் தொடரே வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.’ எனத் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் நடராஜன் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments