1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:21 IST)

டி 20 உலகக் கோப்பையில் இஷான் கிஷனுக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் இடையே போட்டி- டிராவிட் அறிவிப்பு!

கடந்த ஆண்டில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் கண்டிப்பாக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜூன் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் “ரிஷப் பண்ட்டுக்கும் இஷான் கிஷானுக்கும் இடையே உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு போட்டி நிலவும்” எனக் கூறியுள்ளார்.