தொடர்புடைய செய்திகள்
- ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் என்னென்ன தளர்வுகளை எதிர்பார்க்கலாம்??
- 16 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு: தற்போதைய நிலை என்ன?
- 5 லட்சம் பத்தாது.. 16 லட்சம் குடுங்க! – கொரோனா நோயாளியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!
- உலக கொரோனா பாதிப்பு 1.71 கோடி: அமெரிக்காவில் ஒரே நாளில் 66,405 பேருக்கு பாதிப்பு
- மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்/
மீண்டும் தள்ளிப்போகிறதா ஐபிஎல்? தீபாவளிக்காக அதிரடி முடிவு!
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இரண்டு நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப்போட்டி வருமாறு போட்டிகளை நடத்த விரும்புகிறதாம். அதனால் ஐபிஎல் போட்டிகளில் சில மாற்றங்கள் வரலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மாற்றப்பட்ட அட்டவணை வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்