1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (10:35 IST)

இந்திய அணிக்கு அடுத்து இவர்தான் கேப்டனா வரணும்… முனனாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க உள்ளது.

உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.

இந்நிலையில் அணியின் தலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோஹித் ஷர்மா அடுத்து எவ்வளவு நாட்கள் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என தெரியவில்லை. இந்நிலையில் அடுத்து இந்திய டி 20 அணிக்கு கே எல் ராகுலுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.