1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (19:00 IST)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய தொடர்: கங்குலி பேட்டி!

ஐபிஎல் போட்டி தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது 
 
இந்த தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ளதாகவும், டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கும் என்ற தொடர் ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்
 
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்த மாதம் பயணம் செய்ய உள்ளதாகவும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என்றும், வீரர்கள் அனைவரும் தனித்து இருக்க வலுவான ஏற்பாடுகளை செய்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார் 
 
மேலும் இந்திய அணியினர் தங்கள் குடும்பத்துடன் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்