வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:09 IST)

’’சென்னை சூப்பர் கிங்ஸ் ‘’ வீரர்கள் அரசாங்க வேலை போல விளையாடுகின்றனர் – சேவாக் விமர்சனம்

ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாகப் பல திருப்பு முனைகள் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கும் ஏன் அணிகளுக்குமே அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்ச் தினமும் த்ரில்லாக போய்க்கொண்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது.  சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக் சென்னை அணியைக் கடுமையாய் விமர்சித்துள்ளார். அதில் சமீபத்திய போடியில் சென்னை அணி ஜெயித்திருக்கலாம் ஆனல ஜடேஜா மற்றும் ஜாதவின் மந்தமான ஆட்டத்தால் அணி தோற்றது. சென்னை அணி வீரர்கள் அணிக்காக விளையாடுவது

அரசுவேலை போலக் கருதுகிறார்கள். விளையாடாவிட்டாலும் அவர்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்று கருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.