1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Badminton player pv Sindhu announces retirement from Denmark series

’’டென்மார்க் தொடருடன் ஓய்வு ’’?- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி..வி சிந்து அறிவிப்பு

தமிழ் செய்திகள்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,. என் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாகவும் மனதை உடைப்பதாகவும் இருக்கலாம்….ஆனால் என் பார்க்கைவில் இருந்து பார்த்தால் நான் எடுத்துள்ள முடிவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்! நீங்களும் அதற்காக ஆதரிப்பீர்கள்.

பேட்டிமிண்டனில் தோற்கடிக்கலாம் ஆனால் இந்த  கண்ணுக்குத் தெரியாத வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும். இன்றுதான் எனக்கு கண் திறந்தது. அதனால் எனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்த நெகட்டிவிட்டி சமயத்தில் எடுத்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கான வாய்ப்பு அளித்துள்ளேன்…

அதனால் இந்த டென்மார்க் தொடரிலிருந்து நான் ஓய்வு பெறவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து இவ்வுலகைப் பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

அடுத்த கட்டுரையில்
பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை பறித்த ஷார்ட் ரன்! கடுப்பான ரசிகர்கள்!