1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (23:37 IST)

யுக்ரேன் தலைநகர் கீயவில் பகுதியளவு கட்டுப்பாடுகள் தளர்வு

யுக்ரேன் தலைநகர் கீயவில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
 
கீயேவ் ஊரடங்குச் சட்டத்தை சிறிது தளர்த்தியுள்ளார் அந்நகரின் மேயரும் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை உலக சாம்பியனுமான விட்டலி கிளிட்ச்கோ.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 11 மணிக்கு தொடங்கும். காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும். திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்தும் நீண்ட நேரம் இயங்கும் என்று கூறுகிறார்.
 
ஆனால் ரஷ்ய ராக்கெட் தாக்குதல்களின் அச்சுறுத்தல் இருப்பதால், ஊரடங்கு உத்தரவு விதிகளை குடிமக்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.