1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (09:58 IST)

யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை

யுக்ரேன் தலைநகர் கீயவ் மீதான வான்வழித் தாக்குதலை அடுத்து, மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நிலத்தடியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில் ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவரில் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், டெலிகிராம் செயலி மூலம் வெளியுலகுடன் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். சில மணிநேரங்களுக்கு முன்பு டெலிகிராமில் உள்ள ஒரு குழுவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவலை பகிர்ந்துள்ளனர்.