1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (11:51 IST)

இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ கட்டணம் 1 கி.மீ.க்கு ரூ.100

Sri Lanka - Petrol
இலங்கையில் பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்து உயர்த்தியுள்ளதாக இலங்கை ஆற்றல்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக நியூஸ்ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு மறுசீரமைக்கப்பட்ட விலைப்பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, பெட்ரோல் விலை ரூபாய் 450 ஆகவும், டீசல் விலை 445 ஆகவும் மாறியுள்ளது.



இதுதொடர்பாக அமைச்சர் தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்ட விலைப்பட்டியல் இதோ.

Price hike

1 கிலோமீட்டருக்கு 100 ரூபாய்

இன்று காலை முதல் இலங்கையில் புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், மூன்று சக்கர வாகனங்களில் பயணக்கட்டணம் உயர்ந்துள்ளதாக டெய்லி மிர்ரர் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சிலோன் பெட்ரோலிய கழகம் அறிவித்தபடி, இன்று முதல் நாட்டில் எரிபொருள் விலை உயரும் நிலையில், இலங்கை மூன்று சக்கர வாகன ஓட்டிகள் அமைப்பு தங்கள் பயணக்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த இரண்டு முறை நாட்டில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோதும் நாங்கள் உயர்த்தவிலை என்கிறார் அந்த அமைப்பின் தலைவர் லலித் தர்மசேகர. அந்த சமயத்தில், பயணியுடன் பேசி ஒரு விலையை முடிசெய்து கொள்ளும்படி ஒட்டுநர்களிடம் கேட்டிருந்தோம்.

ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. எனவே முதல் 1 கி.மீ.க்கு 100 ரூபாயும், இரண்டாவது கி.மீக்கு 80 ருபாயும் கட்டணமாக விதித்துளளோம் என்று கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.