1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (16:32 IST)

கொடூர கொலைக்கு முன் இளம் பெண் டாக்டர் சகோதரியிடம் பேசியது என்ன?

ஐதராபாத்தில் உயிரிழந்த பெண் அவரின் சகோதரியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. 
 
லின்போது, யாரோ ஒரு லாரி ஓட்டுநர் தனது இரு சக்கர வாகனத்தை பழுது நீக்கித் தர முன்வந்ததாகவும், தான் உதவியை மறுத்தபிறகும் பின்தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
 
அந்த உரையாடலில், "இன்று நீ அலுவகம் சென்று வந்துவிட்டாயா," என்று கொல்லப்பட்ட பெண் கேட்டுள்ளார். அவரின் சகோதரியும் "ஆம் சென்றேன் என்று கூறியுள்ளார். 
 
பிறகு என்னிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இரு, என்ன பிரச்சனை என்று நான் கூறுகிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
அதற்கு அவரின் சகோதரி எதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாயா என்று கேட்டுள்ளார். பதிலுக்கு இந்த பெண் ,''நான் ஏற்கனவே சொன்னதுபோல , என் வண்டியை சுங்கச்சாவடி அருகே நிறுத்த அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை, எனவே புற வழி சாலையில் நிறுத்தினேன். தற்போது டையர் பஞ்சர் ஆகியுள்ளது,'' அதற்கு அவரின் சகோதரி வண்டியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடு என கூறியுள்ளார்.
 
''வண்டியை இங்கேயே விட்டுவிட்டால், காலை எப்படி எடுக்க முடியும்'' என்று கொல்லப்பட்ட பெண் கேட்டுள்ளார். எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம், நீ அங்கிருந்து வேறிடத்திற்கு சென்றுவிடு என்று அவரின் சகோதரி எச்சரித்துள்ளார்.
 
அப்போதும் இந்த பெண் அங்கிருந்து கிளம்ப மறுத்து, யாரை வைத்து வண்டியை எடுக்க முடியும் என கேட்டுள்ளார். மெக்கானிக்கை வைத்து வண்டியை சரி செய்து எடுத்து கொள்ளலாம் என அவர் சகோதரி கூறியுள்ளார்.
 
அப்போதுதான் நடந்தவற்றை பாதிக்கப்பட்ட இந்த பெண் விவரிக்கிறார். ''லாரி ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் இங்கு உள்ளனர். ஏற்கனவே அவர்களில் ஒருவர் இங்கு வந்து என் வண்டியின் பழுதை சரி பார்க்கிறேன் என கூறி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிறகு சரி செய்ததாக வந்து வண்டியை கொடுத்தார். ஆனாலும் என் வண்டி சரியாகவில்லை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,'' என்று பதற்றமாக பேசியுள்ளார்.
 
அதன் பின்னரும், அங்கிருந்த ஆண்கள் மற்றொரு பையனை அனுப்பி, வண்டியை வேறு ஒரு கடைக்கு எடுத்து சென்று சரி செய்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். ஆனால் வண்டியை திரும்ப கொண்டு வராததால், அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுவிட்டதாகவும், அவரை சிலர் பின் தொடர்ந்ததாகவும், ''என்னை பேய் மாதிரிப் பார்க்கிறார்கள்'' என்றும் கூறியுள்ளார்.
 
பிறகு பயமாக இருக்கிறது என பல முறை கூறியுள்ளார். அவரது சகோதரியும் தயவுசெய்து சுங்கச்சாவடி அருகே சென்றுவிடு என்று பல முறை வற்புறுத்தினார். சுங்கசாவடி அருகே பலர் இருப்பார்கள், டிக்கெட் கவுண்டர் அருகே நின்றுகொள் என்று அறிவுறுத்தினார். பதிலுக்கு அங்கு உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரிப் பார்ப்பார்கள், அங்கு செல்ல முடியாது என கூறியுள்ளார்.
 
எனக்கு அழணும் போல இருக்கிறது என்று அந்த பெண் கூறியுள்ளார். ''நீ ஏன் இந்த நேரத்தில் அங்கு சென்றாய்?'' என அவர் சகோதரி கேள்வியும் கேட்டுள்ளார்.
 
அதற்கும் அவர் ''வண்டியை திரும்பி கொண்டுவரும் வரை என்னிடம் பேசிக்கொண்டே இரு, எனக்கு பயமாக இருக்கிறது'' என கேட்டுள்ளார். ''அது வரை எப்படி என்னால் பேச முடியும், எனக்கு வேலை இருக்கிறது, நான் திரும்ப அழைக்கிறேன், நீ சுங்க சாவடி அருகே சென்றுவிடு'' என கூறியுள்ளார் அவரது சகோதரி.
 
கடைசியாக 5 நிமிடம் என்னிடம் பேசு என அழுதுக்கொண்டே இந்த பெண் கேட்டுள்ளார். நீ நாளை சென்றிருக்கலாமே என அவரின் சகோதரி கேட்டதற்கு, என்ன செய்வது எனக்கு வேலை இருக்கிறது. நாளை ஆய்வு நடைபெறவுள்ளது, என்று பதிலளித்துள்ளார்.
 
கடைசியாக கொல்லப்பட்ட பெண், என்னிடம் பேசு என அழுதுகொண்டே கேட்டுள்ளார். அதற்கு நான் திரும்ப அழைக்கிறேன் என மூன்று முறை கூறிவிட்டு, அவரின் சகோதரி அழைப்பை துண்டித்துவிட்டார்.
 
பிறகு இரவு 9.45 மணிக்கு திரும்ப அழைத்தபோது, அவரின் மொபைல் போன் சுவிட் ஆப் ஆகி இருந்தது.