தொடர்புடைய செய்திகள்
- ஏமன் சிறை மீது சௌதி கூட்டணி விமானத் தாக்குதல்: 70 பேர் பலி, ஐ.நா. கண்டனம்
- 10 சதவீதம் பேருக்கு கூட கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆப்பிரிக்க நாடுகள்
- சூனியக்காரிகள் என்று கொல்லப்பட்ட கேட்டலோனிய பெண்களுக்கு பொது மன்னிப்பு!
- ஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா
- தமிழ்நாட்டில் தொடரும் மனித - விலங்கு மோதல்: சிறுத்தைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும்?
ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல் - 70க்கும் மேற்பட்டோர் பலி
தெற்கு ஆப்ரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதால் உண்டான மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.
மலாவி நாட்டில் 11 பேர் இறந்துள்ளனர். இங்கு பல இடங்கள் பேரழிவு நிகழ்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மலாவியில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மொசாம்பிக்கில் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இங்கு அனா புயலால் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்