வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (21:39 IST)

தேமுதிக கூடாரமே காலி; என்னை தாக்க யார் இருப்பார்கள்? - சந்திரகுமார் கேள்வி

தேமுதிக கூடாரமே காலியாக இருக்கும்போது என்னை தாக்க அங்கு யார் இருப்பார்கள்? மக்கள் தேமுதிக நிறுவனர் வி.சி.சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சந்திரகுமார் மீது தேமுதிகவினர் தாக்குதல் நடத்தினர் என்ற செய்திகள் வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”வேலூர் மாவட்டத்தில் எங்களுடைய செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டோம். அப்போது ஒரு தொண்டர் வந்து விஜயகாந்த் உங்களை மீண்டும் கட்சிக்கு கூப்பிடுகிறார் என்று கூறினார். 
 
அதற்கு நான், விஜயகாந்த் வேண்டுமானால் திமுகவில் ஒரு தொண்டராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். தேமுதிக ஒட்டுமொத்தமாக கரைந்துவிட்டது. இப்போது தேமுதிகவில் இருந்த எல்லோரும் திமுகவுக்கு வர தயாராகிவிட்டனர் என்றேன்.
 
இதற்கிடையே அந்த இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இவ்வளவுதான் நிகழ்ந்தது. தேமுதிக கூடாரமே காலியாக இருக்கும்போது என்னை தாக்குவதற்கு அங்கு யார் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.