Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்!!; அப்படி என்ன இருக்கு உள்ள?

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:21 IST)
நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பீட்சா உள்ளிட்ட பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமான இடம் பெற்றுள்ளது பர்கர். இரண்டு பன்களுக்கு நடுவே சில பல உணவு பொருட்களை அடைத்து உண்ணும் இந்த உணவு உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.

இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக கூறப்படுகிறது. டெ டால்டன்ஸ் உணவகத்தில் இவர் தயாரிக்கும் இந்த பர்கரின் பெயர் தி கோல்டன் பாய்.

5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்) மதிப்புள்ள இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.

எல்லாம் காட்டு

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments