ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு குறைப்பு: இதன் விளைவு என்ன??

புதன், 9 மார்ச் 2022 (12:25 IST)
ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். 
 
ஏற்கனவே பல்வேறு தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரஷ்யாவிற்கான கடன் தகுதி மதிப்பீட்டை சர்வதேச நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது. ஆம், ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அதாவது, ரஷ்யா தான் வாங்கும் கடனை திரும்பக் கட்டும் தகுதியை மேலும் இழந்துவிட்டது. இதன் காரணமாக ரஷ்யாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் கடன் தரத் தயங்கும் நிலை ஏற்படும். மேலும் ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு C என்ற நிலையில் இருந்து மேலும் ஒரு படி குறைக்கப்பட்டால் அந்நாடு கடன் பெறும் தகுதியை முற்றிலும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments