செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வது சாத்தியமா??

புதன், 22 நவம்பர் 2017 (15:33 IST)
செவ்வாய் கிரத்தில் மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்மறையான கருத்து ஒன்று வெளியாகியுள்ளது. 

 
அதாவது செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வது மிகவும் கடினம் என ரஷ்ய விஞ்ஞானி எவ்ஜினி நிகாலோங் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மையத்தில் பேராசிரியரான் இவர், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வது தொடர்பான ஆய்வை செய்து வருகிறார்.
 
இவரது ஆய்வின் முடிவில், மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் அவனது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளார்.
 
அதோடு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மனிதனின் உடல் செயல்படுவதால், இந்த ஈர்ப்பு விசைக்கு ஏற்ற மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உருவாகின்றன. 
 
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி பூமியை போன்று இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும். 
 
விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லை. விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷிய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments