’மனிதநேயம்’: ஒலிம்பிக்கில் வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட்ட வீராங்கனை

’மனிதநேயம்’: ஒலிம்பிக்கில் வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட்ட வீராங்கனை

புதன், 17 ஆகஸ்ட் 2016 (15:10 IST)
ரியோவில் நேற்று பெண்களுக்கான 5000 மீட்டர் 2-வது அரையிறுதி ஓட்டப் பந்தயத்தில் வீராங்கனைகள் மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.


 


அப்போது, அமெரிக்காவின் அப்பே டி அக்னோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டனர். இதில் அமெரிக்க வீராங்கனையின் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து அவதி பட்டார். நியூசிலாந்து வீராங்கனை பரிதாபப்பட்டு அமெரிக்க வீராங்கனையிடம் வந்து நலம் விசாரித்து, எழுப்பி விட்டார். பின் இருவரும் ஓட துவங்கினர். சில மீட்டர் தூரம் சென்றதும் வலியால் மீண்டும் அமெரிக்க வீராங்கனை கிழே விழுந்தார்.

இதனால் நியூசிலாந்து வீராங்கனை  திரும்பவும் அமெரிக்க வீராங்கனையிடம் வந்து ”உடல் நலம் இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால், அமெரிக்க வீராங்கனை அதற்கு மறுத்து விட்டார். தன் மனவலிமையால் எழுந்து மீண்டும் ஓடினார். நியூசிலாந்து வீராங்கனை 15-வது நபராக வந்து அமெரிக்க வீராங்கனைக்காக காத்திருந்தார். அமெரிக்க வீராங்கனை சிரமப்பட்டு 5000 மீட்டரை ஓடி கடைசியாக வந்தார். பின்னர் அவரால் நடக்க முடியாமல் திணறியதால் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments