சோமாலியா தற்கொலை தாக்குதலை நடத்தியவர் முன்னாள் எம்.பி
சோமாலியா தற்கொலை தாக்குதலை நடத்தியவர் முன்னாள் எம்.பி
சோமாலியா தற்கொலை தாக்குதலை நடத்தியவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிய வந்துள்ளது.
சோமாலியத் தலைநகர் மொகடிஷு விமான நிலையத்தையொட்டி ஆப்பிரிக்க யூனியன் படை மையத்துக்கு அருகிலும், ஐ.நா. அலுவலகக் கட்டடத்துக்கு அருகிலும் வெடிபொருள் நிரப்பிய வாகனங்களில் இரு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அந்த நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் பெயர் சலா நூ இஸ்மாயி. அவர், சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.