Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைப்பூ குருமா

Written By Sasikala
Updated: திங்கள், 28 நவம்பர் 2016 (16:42 IST)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - துருவியது 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
பூண்டு - ஐந்து பல்
இஞ்சி - சிறு துண்டு

 
செய்முறை:
 
வாழைப்பூவை பிரித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.
 
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய் இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
 
வெங்காயம் தக்காளியை பொடியாக இல்லாமல் சற்று நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
 
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments