சுவை மிகுந்த அத்திக்காய் கிரேவி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பொடியாக அரிந்த அத்திக்காய் - 1 கப்
வெங்காயம் - தலா 1
தக்காளி - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைத்த கசகசா - 1 டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்
தனியா - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - 1 கட்டு.

செய்முறை:
 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அத்திக்காயைப் போட்டு வதக்கவும். காய் வெந்ததும் அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துச் சேர்க்கவும். 
 
நன்கு வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கடலை மாவை கரைத்து இந்த கிரேவியில் ஊற்றவும். கிரேவி திக்காகவும், தனி சுவையுடனும் இருக்கும். சுவை மிகுந்த அத்திக்காய் கிரேவி தயார்.

எல்லாம் காட்டு

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

அடுத்த கட்டுரையில்
Show comments