சுவை மிகுந்த தேங்காய் பால் பிரிஞ்சி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 2 கப்
தேங்காயின் முதல் கெட்டி பால் - 1 கப்
2 ஆம் பால் - 2 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 6
ஏலக்காய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
உப்பு - தேவைக்கு
முந்திரி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து வடித்து உலர்த்தவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
 
நன்கு வதங்கியதும் இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரிசி, உப்பு போடவும். மிதமான தீயில் வேகவிட்டு முக்கால் பதத்திற்கு சாதம்  வெந்ததும், முதல் பால், சேர்த்து மேலும் 2 நிமிடம் வேகவைத்து மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

பிறகு உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். சுவை மிகுந்த தேங்காய் பால் பிரிஞ்சி தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments