சுவையான பன்னீர் 65 செய்ய...!!

தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
தயிர் - 1 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
லெமன் சாறு - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:
 
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு  மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
 
பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து  விடவும். சுவையான பன்னீர் 65 தயார்.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments