எள்ளுப்பொடி எப்படி செய்வது தெரியுமா...?

தேவையான பொருள்கள்:
 
எள் - 1/2 கப் 
உளுந்து - 1/2 கப் 
மிளகாய் வத்தல் - 15
பூண்டு பற்கள் - 10
புளி - சிறிய கோலி அளவு 
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை  போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
 
எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
  
நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு  வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி தயார். இவை இட்லி தோசையுடனும், சுட சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

 

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments