Daily Horoscope

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!

Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (17:35 IST)
 
புதிய பருத்தி ஆடைகளை முதன்முதலில் துவைக்கும்போது சாயம் போகாமலிருக்க, வெறும் குளிர்ந்த நீரில் நனைத்து புளிக் கரைசலில் சிறிது நேரம் ஊறிய பிறகு அலசி எடுத்தால், சாயம் போகாது. முதல் சலவையின் போது சோப் உபயோகிக்கக் கூடாது.
 
பச்சைப் பட்டாணி நிறைய வாங்கிவிட்டால் உரித்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வாயை நன்றாகக் கட்டி குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்தால், எத்தனை நாளானாலும் கெடாமல் பசுமையாக இருக்கும்.
 
தரையில் ஏற்படும் கரைகளை போக்க, வினிகர் கலந்த நீரில் துணியை முக்கி அழுத்தித் துடைத்தால் கறை போய்விடும்.
 
மிளகாய் வற்றலை வறுக்கும்முன் அதனுடன் அரை ஸ்பூன் சாதாரண உப்பைச் சேர்த்தால், மூக்கைத் துளைக்கும் நெடி வராது.
 
பிரம்பு நாற்காலிகளை சோப்பு நீரில் கழுவினால் பளிச்சென்று சுத்தமாகிவிடும்.
 
எண்ணெய்ப் பிசுக்கு உள்ள பாத்திரத்தை கொதிக்க வைத்து சிறிது உப்பு போட்டு ஊறவைத்து, பின்பு கழுவினால் பாத்திரம் பளிச்சென்று  இருக்கும்.
 
கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கரைகள் இருந்தால், சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு தண்ணீர் கலந்து குலுக்கினால்,  கறைகள் நீங்கிவிடும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments