விவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திரராவ் கைது: ஸ்டாலின், கமல் கண்டனம்

சனி, 8 செப்டம்பர் 2018 (23:12 IST)
திருவண்ணாமலையில்  விவசாயிகளிடம்  கருத்து கேட்க வந்த அகில இந்திய விவசாய சங்கத்தலைவர் யோகேந்திர யாதவை,போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்ததை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க நினைக்கும் தமிழக அரசு இவற்றுக்கு எல்லாம் விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோ கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்த வீடியோவில் கூறியதாவது: 'வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து நமது விவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்த அதிகாரம் அரசுக்கு எப்படி வந்தது? சட்டத்தை காரணம் காட்டி இவ்வாறு குரல்கள் எழாமல் செய்யும் வேலை சர்வாதிகாரம் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments