வரம்பு மீறினால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் - பத்திரிகையாளர்களை மிரட்டும் பாஜக தலைவர்

ஞாயிறு, 24 ஜூன் 2018 (10:53 IST)
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
சமீபத்தில் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் லால் சிங், காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும் என மிரட்டல் தொணியில் பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எல்லாம் காட்டு

ஆட்சியமைப்பது பற்றி ஸ்டாலின் சொன்னது இதுதான்!.. மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி!..

முக ஸ்டாலின் தோல்வி!. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் துர்கா ஸ்டாலின்!...

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்?

நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?

ஜூலை 8ல் இந்தியா கூட்டணியின் கூட்டணி.. தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவது திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments