Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெனின், பெரியாரை தொடர்ந்து அம்பேத்கர் சிலை உடைப்பு!

Updated: புதன், 7 மார்ச் 2018 (19:29 IST)
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.


திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனால் அங்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஹெச்.ராஜா நேற்று தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
இதற்கு தமிழக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற பாஜக பிரமுகரை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்நிலையில் தற்போது அம்பேதகர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இன்று அதிகாலை அடையாள தெரியாத நபர்களால் அம்பேதகர் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலித் சமூக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய சிலை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சீனப்பொருட்கள்!. இந்தியா சதி செய்கிறது!.. வெள்ளை மாளிகை குமுறல்!.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பாஜக.. ஆண்டுக்கு ரூ.40,000, சமாஜ்வாதி கட்சி.. உபியில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வாக்குறுதி..

நாளை சுதந்திர தினம்.. இன்று டெல்லி ஐகோர்ட், செங்கோட்டை, ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

பல வருஷமா நெருங்கிய தோழிகள்!. டி.என்.ஏ சோதனையில் சகோதரிகள்!.. ஆச்சர்ய செய்தி!...

யாருமே வரல!.. தனியாக நின்ற ராணுவ வீரர்.. கட்டிப்பிடித்த உயர் அதிகாரி!.. வைரல் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments