ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஜி.கே.மணி கோரிக்கை

ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஜி.கே.மணி கோரிக்கை

சனி, 23 ஏப்ரல் 2016 (04:35 IST)
முதல்வர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக தலைவர் ஜி.கே.மணி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், மிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரது தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி பொது மக்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்த கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
குறிப்பாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அதிமுக பரப்புரைக் கூட்டங்களில் வெப்பம் மற்றும் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 

எல்லாம் காட்டு

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

Show comments