செவ்வாய், 11 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2025 (18:17 IST)

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

Rapper

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

 

முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: 

 

எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது. 

 

தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

 

தியாகராஜன் சார் வீட்டில் தான் நான் வளர்ந்தேன். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அவர் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.  கனடாவில் இருந்தாலும் ரம்பாவும் நானும் நெருக்கமாக தான் உள்ளோம். ரம்பாவின் அம்மா ஒரு இனிப்பு பண்டம் இருந்தாலும் வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். என்னை பத்திரிகையாளராக பார்க்காமல் அவர்கள் வீட்டில் இடம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

 

ஒரு ஊழியர்  என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என்   பாஸிடம்  கூறினேன்.  உடனே ரூ.20 ஆயிரம்  கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும்.  குழந்தைகளுக்கான பாலியல் விஷயத்தை மையமாக வைத்து சாக்லேட் என்ற குறும்படம் தயாரித்தேன். 2 வதாக தென் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து கொலை விளையும் நிலம் என்ற டாக்குமென்டரி படத்தை தயாரித்தேன். அப்படத்தை விகடன் செய்தியாளராக இருந்த ராஜீவ் காந்தி இயக்கினார். அடுத்து 'எண்ணம் போல் வாழ்க்கை' இது கொரணா காலத்தில் ஆல்பம் பாடலாக தயாரித்தேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா U1 ரெகார்ட்ஸ் மூலம் வெளியிட்டார். சுமார் 20 கலைஞர்கள் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் உதவி புரிந்தார்கள். தொடர்ந்துநடிகர் ஜனகராஜ் அவர்கள், 700 படங்கள் நடித்திருக்கிறார். அவரிடம் தாத்தா என்ற குறும்படத்தின் கதையை நரேஷ் இயக்குனர் கூறினார்.. ஜனகராஜ் சாரிடம் இந்த கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், நான் அப்படியே எடுத்து வைத்து விடுவேன் என்று நான்  கூறிய பிறகு ,அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்றது. 

 

இந்த சமயத்தில், சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன். 

 

அதன் பிறகு, எல்லா ஊர்களுக்கும் ராஜா சார் வந்து விட்டார். ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் வரவில்லை. ராஜா சாரை எங்கள் ஊர் மக்களுக்காக அழைத்து வர வேண்டும். அவரை வைத்து எங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் தினமலர் மீடியா பார்ட்னராக இருந்து பெரும் உதவி புரிந்தது.

 

என்னுடைய  ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. 

 

நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.

 

 ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில், 

ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

 

ராபர் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை  எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதி யாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்திருக்கிறது. 

பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்த பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போக போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

 

நிறைய சிறிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும், புதிய நபர்களுக்கும் பாக்யராஜ் சார் ஆதரவாக இருக்கிறார்

 

பாக்யராஜ் சாரை பார்த்து சினிமாவிற்கு வந்தவர்கள் நிறைய பேர். சாருடைய படத்திற்கு போக வேண்டும் என்றால் அவர் நன்றாக நடிப்பாரா?! டான்ஸ் ஆடுவாரா?! என்று எதையும் பார்க்க வேண்டாம். கதை நன்றாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தினால் படம் பார்க்க அத்தனை பேர் வந்தார்கள்.

 

தியாகராஜன் சார் சினிமாவிற்கு வந்த போது எத்தனை பேர் மிரண்டு போனார்கள்?! அதிக படங்களில் வில்லனாக நடித்து பேர் வாங்கிய ஒரே கதாநாயகன் தியாகராஜன் சார் தான். அம்பிகா மேடம், ராதா மேடம் கொடுக்காத வெற்றிகள் இங்கு கிடையாது. அழகிய லைலாவாக ரம்பாவை போல் யாரால் சிறப்பாக நடித்திருக்க முடியும்?! இவர்கள் அனைவரும் இந்த மேடைக்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.

 

இந்த படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்த பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன். 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் என்னுடைய ஊர் காரர். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு போன் செய்து பேசுவேன். எல்லா படமும் நல்ல படம் என்று சொல்கிறீர்களே?! அப்போது நல்ல படம் என்றால் என்ன என்று சில சமயம் மிரட்டி கூட இருக்கிறேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் அபிப்ராயம் கேட்பார். சில படங்கள் சென்சார் போர்டு முன் கூட்டியே பார்த்துவிட்டால் நானே அழைத்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறுவேன்.

 

இங்கிருப்பவர்கள் அனைவரும் சிறிய படத்திற்கு உதவி செய்பவர்கள் தான். என்னோடு பயணித்து எனக்கு பாதை போட்டு கொடுத்தவர்கள். என்னுடைய இந்த அழகான பயணத்தில் இன்னும் பலரை அழைத்து செல்ல ஆசைப்படுகிறேன். நான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தாலும், புது முயற்சிகள் எடுத்தாலும் இங்குள்ள பத்திரிகையாளர்களிடம் புகைப்படம், காணொளி மற்றும் செய்திகளை வெளியிட்டு அனுப்புங்கள் என்று உரிமையோடு கூறுவேன். அவர்களும் மறுநாளே எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்த பாசத்திற்கு ஈடு இணை கிடையாது. அக்காவாக தங்கையாக தோழியாக எனக்கு ஆதரவைத் தரும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா  நல்லது கெட்டதிலும் என் அம்மா என்னுடனே இருந்திருக்கிறார்கள். எனது கணவர் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆதரவு இல்லை என்றால், பிரச்சினைகள் போராட்டங்களை தாண்டி ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியாது. அதேபோல், தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இந்த சக்தி பெண்களிடம் இருந்தாலே ஜெயித்து விடலாம்.

 

வந்திருந்த அனைவருக்கும் நன்றி. ராபர் படம் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

 

நடிகர் ஸ்டில் பாண்டி பேசும் போது,

 

என்னை சினிமா துறைக்கு முதன்முதலாக கைப்பிடித்து அழைத்து வந்த ஸ்டில்ஸ் ரவி அவர்களுக்கு வணக்கம்.  இந்தப் படத்தில்  போலீஸ் கதாபாத்திரத்திற்காக   இயக்குனர் என்னை அணுகினார். இப்போது கதாநாயகன் கதாநாயகி அப்பா பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் இயக்குனர், முதலில் கதை கேளுங்கள் என்று கூறினார். கதையைக் கேட்ட பின்பு மாறுபட்டு போலீஸ் கதாபாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில், ஜே பி சாருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு இருந்ததால் ஒப்புக்கொண்டேன். 

 

ஸ்ரீ இயக்கிய தர்மம் என்ற குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. தேசிய விருது வென்றது. அதன் பிறகு அவர் மண்டேலா படம் மூலமாக இயக்குனராக விட்டார். அடுத்து புன்னகை வாங்கினால் தண்ணீர் இலவசம் என்ற குறும்படத்தை நிதிலன் இயக்கினார். அந்த குறும்படத்திற்கு நாளைய இயக்குனரில் சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது எனக்கு கொடுத்தார்கள். அவரும் இயக்குனராகி குரங்கு பொம்மை, மகாராஜா வரை வந்துவிட்டார். என்னுடைய மகன் இலன் என்னை வைத்து தான் முதல் குறும்படம் எடுத்தார். Stills ரவியிடம் பணியாற்றும் போது நடிகனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தியாகராஜன் சார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். பாக்யராஜ் சார் வீட்டிற்கு புகைப்படங்கள் கொடுப்பதற்கு சென்றிருக்கிறேன். மிகவும் பெருமையாக இருக்கும். சில நேரங்களில் கேமராவை விட்டுவிட்டு நடிக்க சென்று விடுவேன். அப்போது ரவி சார் என்னை திட்டுவார். சில சமயங்களில் அடி கூட வாங்கி இருக்கிறேன். பிறகு அவரே நடிக்க ஊக்குவித்தார். ஒருமுறை கேமராவை விட்டு தலையை வெளியே எடுத்து நீ நடிகனாகி விடுவாய் என்றார். நானும் புகைப்படம் எடுப்பாளராக அங்கிருந்து தான் இந்த மேடைக்கு வந்துருக்கிறேன். என் மகனும் இயக்குனராகிவிட்டார்.

நான் புகைப்படம் எடுக்கும் போது என்னை இப்படி யார் எடுப்பார்களா என்று நினைத்திருக்கிறேன். இன்று அது நடந்து விட்டது. ராபர் படத்தில் காவல் துறை அதிகாரியாக நன்றாக நடித்திருக்கிறேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. சகோதரி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது புகைப்படம் எடுத்திருக்கிறேன். இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் பலர், அடைபவர்கள் சிலர். ஆகையால், முயற்சி செய்து கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கான மேடை கிடைக்கும் என்றார்.

 

நடிகை தீபா பேசும்போது,

 

இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எழுதுவதில் தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் மகனுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பா ளோ அதே தாய் மகன் தடம் மாறினால் என்ன செய்வாள் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதை இந்த படத்தில் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.

இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் இருக்கும் மேடையில் நான் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணவருக்கு அம்பிகா மேடத்தை மை மிகவும் பிடிக்கும் என்றார்.

 

இசையமைப்பாளர் ஜோகன் பேசும்போது,

 

கண்டு நேசிப்பவர்களை விட காணாமல் நேசிப்பவர்கள் பாக்கியவான் என்று கூறுவார்கள். அதுபோல இங்குள்ளவர்களின் படங்கள், பாடல்கள், சூழ்நிலைகள், நடிப்பு என்று சிறுவயதிலிருந்தே எங்களுக்கு ஊக்கமளித்தது. இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தை வெளியிடும் சக்தி அண்ணனுக்கு நன்றி.

 

கவிதா என் உடன்பிறவா சகோதரி. அவர் எடுத்த முதல் குறும்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அதிலிருந்து சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் ஆதரவாக இருக்கிறார். நீண்ட கால நண்பர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் பாண்டிக்கும் நன்றி. இசையைக் கேட்டு பாடல்களுக்கு கருத்து கூறுங்கள். இன்று சிம்பொனி இசையமைக்கும் ராஜா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். 

 

நடிகர் சத்யா பேசும்போது 

 

நான் பாலு மகேந்திராவின் மாணவன். அவர் தான் என்னை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என்னுடன் அவர் இல்லை. ஆனால், தியாகராஜன் சார், பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இந்த மேடையில் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக பாலுமகேந்திரா சாரை பார்க்கிறேன். அவரிடம் நடிப்பு கற்றுக் கொண்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன். ஆனால், பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கவிதா அக்கா சிறுவயதில் டியுஷன், பள்ளி, கல்லூரி அனைத் திலும் சேர்த்து விட்டார். பாலுமகேந்திரா சாரிடமும் மாணவராக அவர் தான் அறிமுகப்படுத்தினார். அதேபோல், அக்கா தான் ஆனந்த் அண்ணாவிடமும் இவன் என்னுடைய தம்பி, உபயோகப்படுத்த முடிந்தால் உபயோகப்படுத்தி கொள் என்றார். அதன்பிறகு, மெட்ரோ படத்தில் எதிர்மறையான பாத்திரம் கொடுத்தார். கோடியில் ஒருவன் படத்தின் போது, ராபர் படத்தைப் பற்றி ஒரு வரி கூறினார். எனக்காகவும், அவருடைய இணை இயக்குனர் பாண்டிக்காகவும் எழுதப்பட்ட கதை தான் ராபர். 

 

மார்ச் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. சக்தி அண்ணா கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம். சிறிய படம், பெரிய படம் என்று பார்க்காமல் நல்ல படத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இப்பவும் என் வீட்டில் சினிமாவில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என் அண்ணன் மட்டும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.என்றார்

 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,

 

இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதா பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பல அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் எப்போதும் முதல் வரிசை அல்லது அதற்கு அடுத்து வரிசையில் தான் அமர்ந்திருப்பார். அங்கிருந்து கொண்டு என்ன தான் பேசுவாய்?! இந்த படம் என்ன தான் செய்து விடும் என்று எகத்தாளமாக பார்த்துக் கொண்டே இருப்பார்.

 

பொதுவாக ஒரு படம் வெளியாக தயாரான நிலையில், விழா எடுப்பார்கள். அப்போது அனைவரும் அவர்களுக்கான விழாவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், முதலில் பதட்டமாக இருப்பது தயாரிப்பாளர் தான். அதற்கு அடுத்து விநியோகஸ்தர் தான். நாம் பேசுவதையும், படத்தையும் எல்லாரும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். என்ன சொல்ல போகிறார்கள் என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், கவிதா எப்படி இருக்கிறார் என்று கவனித்தேன். அவர் ஜாலியாக ஊக்கமளித்து பேசினார்.

 

ஒரு படம் வெற்றியடைய அப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர்கள் நல்ல விதமாக எழுத வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். ஆனால், சக பத்திரிகையாளர் தயாரிப்பாளராக ஆனவுடன் பெரிய மக்கள் தொடர்பாளர்கள் அனைவரும் தங்களது ஆசீர்வாதத்தை படத்திற்கும், தயாரிப்பாளருக்கும் கொடுத்திருக்கிறார்கள். 

 

எம்.ஜி. ஆர். காலகட்டத்தில் இருந்து இருக்கும் மக்கள் தொடர்பாளர் திரை நீதி செல்வம் அவர்களை இந்த படத்திற்கு மக்கள் தொடர்பாளராக இருக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். தியாகராஜன் சார், பாக்கியராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இவர்கள் பல வருட காலங்களாக பல மேடைகளை பார்த்திருப்பார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.

 

அந்த காலத்தில் கல்யாண வீடுகளில் ஹிந்தி பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். இளையராஜா காலத்திற்கு பின்பு தான் தமிழ் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. அது போல நிகழ்ச்சியை தமிழ் மொழியை மட்டும் பேசாமல் நடுவில் பல ஆங்கில வார்த்தைகளை கலந்து தொகுத்து வழங்கினால் தான் ரசிக்கும் படியாக இருக்கும் என்பதை உடைத்து விட்டு, அழகு தமிழால் மேடையை தன்வசப்படுத்திக் கொள்கிறார் கவிதா. அது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 

 

மெட்ரோ படத்தை பிடித்தவர்களுக்கு ராபர் படமும் பிடிக்கும். படத்தை பார்த்தேன், மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை,