ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (08:32 IST)

தியாகராஜ பாகவதர் பயோபிக்கை எடுக்க ஆசைப்படும் நடிகர் பார்த்திபன்!

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தியாகராஜ பாகதவர். இவர் நடித்த ஹரிதாஸ், அசோக்குமார் மற்றும் பவளக்கொடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்று, விடுதலை செயப்பட்டபின் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைய, தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றார்.

அப்படிபட்ட நடிகரான தியாகராஜ பாகவதரைப் பற்றி இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இயக்குனர் வசந்த், தியாகராஜ பாகவதரின் பயோபிக்கை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.

அதே போல பாகவதரின் வாழ்க்கையே மாற்றிய லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சம்மந்தமாக உருவாகும் ‘தி மர்டர் மிஸ்டரி’ என்ற வெப் சீரிஸும் உருவாகிறது. இதிலும் என் எஸ் கே மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோரின் வாழ்க்கை பற்றிய வெளியே தெரியாத சம்பவங்கள் இடம்பெற உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்த வெப் தொடரை அறிமுக இயக்குனரான சூர்யபிரதாப் சோனி லிவ் ஓடிடி தளத்துக்காக இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை படமாக்க திரைக்கதை கூட வைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதனால் பார்த்திபனும் அடுத்து தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைப் படமாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.