ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:49 IST)

இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு படம் பண்ணுவேன் -யோகி பாபு

இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு பம் பண்ணுவேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு. இவர், யோகி, அரண்மனை, பரியேறும் பெருமாள், டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், கூர்கா, மண்டேலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த மாவீரன், ரஜினியுடன் இணைந்து நடித்த ஜெயிலர் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு பம் பண்ணுவேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது:

நிறைய பேர் கதையைக் கேட்டுத்தான் படம் பண்ணுவார்கள். ஆனால் நான் இயக்குனர்களின் கஷ்டத்தைக் கேட்டுத்தான் படம் பண்ணுவேன்.இனியுடன் அப்படித்தான் படம் பண்ணுவேன்…. இதனால் நிறைய இயக்குனர்கள் உருவாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.