‘பாகுபலி’ படத்துக்காகப் பட்ட கஷ்டத்துக்கு ஈடான பலனை அனுபவிக்கப் போகிறார் பிரபாஸ் என்கிறார்கள் தெலுங்குப் படவுலகினர். எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘பாகுபலி’ படத்துக்காக, 5 வருடங்கள் வேறெந்தப் படத்திலும் நடிக்காமல், ‘பாகுபலி’யே கதியெனக் கடந்தார் பிரபாஸ். ஒருசில நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்ட விளம்பரப் படத்தில் கூட அவர் நடிக்கவில்லை.