1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ashok
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:31 IST)

ரஜினியிடம் கதை சொன்ன கௌதம்

ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தத் தகவலை கௌதமே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
 

லிங்காவுக்குப் பிறகு என்ன பண்ணலாம் என்று ரஜினி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கௌதம் அவரை சந்தித்து கதை கூறியிருக்கிறார். இந்த விஷயம் எப்படியோ லீக்காகி பத்திரிக்கைகளிலும் அப்போது வந்தது. நாமதான் அடுத்த ரஜினிபட இயக்குனர் என அவர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ரஞ்சித் அந்த வாய்ப்பை தட்டிச் சென்றார்.

ரஞ்சித்திடம் நல்ல கதை இருக்கிறது என்று மகள் சௌந்தர்யா மூலமாக அறிந்தே ரஜினி கபாலி படத்தின் கதை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.

கௌதம் கூறிய கதையும் ரஜினிக்குப் பிடித்துள்ளதால் அவரது படத்தை இயக்கப் போகிறவர்கள் பட்டியலில் கௌதமும் இடம் பிடித்துள்ளார்.