1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:09 IST)

மீரா மிதுன் மீது வழக்கு பதிவு..

ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், மிரட்டல் ஆடியோக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மேலும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் சென்னை எழும்பூர் ஹோட்டல் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹோட்டல் அதிகாரி போலீஸாரை விமர்சித்தது குறித்து விளக்கம் கேட்டதாகவும், அதற்கு மீரா மிதுன் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது.