வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (19:17 IST)

"கமல் முன்பே எல்லை மீறிய வனிதா" - ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது.


 
இன்றைய நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல் பங்கேற்றுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வீட்டில் இருக்கும்  போட்டியாளர்கள்,  நாமினேட் செய்யப்பட்ட அந்த 7 போட்டியாளர்களில் யார் வேட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். 
 
உன்னுடனே அதிகப்பிரசங்கி வனிதா ஓடி வந்து மதுமிதா என எல்லாருக்கும் சேர்த்து டிக் செய்தார். இதனை பார்த்த மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துவிட்டனர். பின்னர் மீரா மிதுனும் மதுமிதாவுக்கு எதிராக மாறினார். இதனை கண்டு மதுமிதா கண்கலங்கி அழுகிறார். 
 
எனவே வீட்டிற்கு இருப்பவர்கள் அனைவரும் மதுமிதாவுக்கு எதிராக இருந்தாலும் மக்கள் மதுவிற்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள். எனவே இதற்கு முன்பு வந்த ப்ரோமோவில் கமல் சொல்லியது போலவே அந்த 10 கோடி ஒட்டு மதுமிதாவுக்கு தான் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. எனவே இன்று இந்த வீட்டை வீட்டுக்கு வெளியேறப்போகுது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் அதிகரித்து விட்டது.