வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:03 IST)

புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் பிரச்சனை… ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறிய அல்லு அர்ஜுன்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்குக் காரணம் ஷூட்டிங் சம்மந்தமாக இயக்குனர் சுகுமாருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக ஷூட்டிங் நடக்கவேயில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அல்லு அர்ஜுன் இயக்குனரிடம் கோபித்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.