'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!
அஜித் நடித்த 'விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று தமிழக அரசு சற்று முன் பிறப்பித்த உத்தரவில் இந்த படத்திற்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை காட்சிகள் தெரிவித்துக் கொள்ளலாம் என்றும் நாளை ஒருநாள் மட்டும் இந்த அனுமதி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு 'விடாமுயற்சி திரைப்படம் முதல் காட்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்க இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் கூறி இருப்பதாவது:
லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, "விடாமுயற்சி" என்ற திரைப்படத்திற்கு 06.02.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 2.00 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட 1955-ம் ஆண்டு, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 11-ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, 1957-ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் உள்ள 'சி' படிவ நிபந்தனை 14 மற்றும் 14-A-வினை தளர்த்தி, இதுகுறித்து முன்கூட்டியே உரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அனுமதிக்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.