ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரத அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நடந்துவரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மாணவர்கள், மட்டுமின்றி திரையுலகினர், வர்த்தகர்கள், திரையரங்குகள், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். அடையாள வேலைநிறுத்த அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் எழுச்சிக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.