நாவில் எச்சில் ஊறும் கோதுமை அல்வா செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - முக்கால் கப்
நெய் - கால் கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பாதாம் - 4 (நறுக்கியது)

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம்  நன்கு கிளறி விட வேண்டும். 
 
பின்னர் அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது,  சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய்  பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், சுவையான கோதுமை அல்வா தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments