தீபாவளி: சுவை மிகுந்த மாலாடு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பொட்டுக்கடலை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பாதாம் - 8
முந்திரி - 8
பிஸ்தா - 8
ஏலக்காய் - 3
நெய் - 2 கரண்டிகளுக்கு  அதிகம்.

செய்முறை:
 
பொட்டுக்கடலை  லேசாக வறுத்து மிக்ஸியில்  நன்றாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும்  லேசாக வறுத்து  மிக்ஸியில் கரகரப்பாகப்  பொடிக்கவும். ஏலக்காயுடன்  சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 
பொட்டுக்கடலை மாவு, மற்றும்  முந்திரி, பாதாம், சர்க்கரைப் பொடி  எல்லாவற்றையும்  ஒரு  அகன்ற தாம்பாளத்திலோ  தட்டிலோ   சேர்த்துக்  கலக்கவும். இனிப்பு  குறைவாக  வேண்டியவர்கள்   சர்க்கரைப் பொடியைக் குறைக்கவும்.
 
வாணலியில்  பாதியளவு  நெய்யை விட்டு  மிதமான  தீயில் நன்றாகச் சூடாக்கவும். தாம்பாளத்தில்  கலவையை பாதியாக  பிரித்துக் கொள்ளவும். பாதிக் கலவையில்  நன்றாகக்  காய்ச்சிய  நெய்யைவிட்டு அகலமான  கரண்டியினால் நன்றாகக்  கலக்கவும்.
 
சூடான நெய்யுடன் நெய்யின் சூட்டில்  சர்க்கரை இளகி  உருண்டை பிடிக்க முடியும். சற்று சூடாகவே  இருக்கும் போது  லட்டைப் பிடிக்கவும். ஏலக்காய் மணத்துடன்  முந்திரி பாதாம்  ருசியுடன் சுவையான் மாலாடு தயார்.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments