திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (16:14 IST)

கேவலமா இல்லையா..? அந்தரங்கம் பற்றி பேசிய சம்யுக்தா - விஷ்ணுகாந்த் - விளாசிய ராஜலக்ஷ்மி!

பிரபல சீரியல் நடிகையான சம்யுக்தா விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகிய ஒரே மாதத்திலே இருவரும் பிரிந்து விவாகரத்து கேட்டு வருகிறார்கள். இதனிடையே தாங்கள் ஏன் பிரிந்தோம் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்து ஒருவர் மாறி ஒருவர் அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்கள். 
 
மேலும் ஒரு மாத வாழ்க்கையையும், தங்களின் தனிப்பட்ட அந்தரங்க உறவை குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் பொதுவெளியில் கூறி அதிர்ச்சியை கிளப்பி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது நடிகை சம்யுக்தா, விஷ்ணுகாந்த் உடலுறவு விஷயங்களில் மிருகத்தனமானவர் என கூறியுள்ளார். 
 
எந்த அளவிற்கு என்றால், அவர் என்னை ஒரு மனைவியாக பார்க்கவே இல்லை. ஒரு விபச்சாரியாக தான் பார்த்தார். ஆம், விஷ்ணுகாந்த் ஆபாச படத்தை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல் பண்ண ஒத்துழைக்க சொல்லு அடித்தார் என கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு என் மகளை 24 மணி நேரமும் ஒத்துழைக்க சொல்லி டார்ச்சர் செய்தார் என கூறி பகீர் கிளப்பியுள்ளார். 
 
 இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பாடகி ராஜலக்ஷ்மி, அந்தரங்க விஷயத்தை பற்றி மீடியாவில் வந்து பேசுவது awkward ஆக இருக்கு. இருவருக்குள் இருக்கும் விஷயத்தை வெளியில் கூறி மற்றவர்களிடம் பரிதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். இருவருக்கும் நடுவில் பிரச்சனை என்றால் அதை அவர்கள் மட்டும் பேசி தீர்க்க வேண்டும், அல்லது பேசாமல் இருக்க வேண்டும் என கணவன் மனைவிக்கு பிரச்சனை என்றால் அதை அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என  ராஜலக்ஷ்மி கூறி இருக்கிறார்.