Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கிழமையில் எந்த தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது உகந்தது...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (15:13 IST)
 
புதன் கிழமையன்று, கணபதியை வணங்கி சுப காரியத்தை தொடங்கி, உலகின் முதல் கடவுளான விநாயகரை வணங்கினால் உறுதியான,  வெற்றி கிடைக்கும்.
 
வியாழன் கிழமை என்பது, குருவின் தினமாகும். வியாழன் விஷ்ணு பகவானுக்கும் உகந்த தினமான வியாழன் தினத்தில், அவரின்  துணைவியான லக்‌ஷ்மி தேவியை வணங்கிடவும், உகந்த நாள். தட்சிணாமூர்த்தி வடிவமான, குருவின் வழிபாடு செய்திடவும் உகந்த நாள்  வியாழன்.
 
வெள்ளிக் கிழமைஎன்று, துர்க்கை விரதம் இருப்பதன் பலனாக, துர்க்கை அம்மநின் பலவிதமான அவதாரங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.பெண் தெய்வங்களின் வழிபாட்டிற்கு ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை .
 
சனிக் கிழமைஎன்று, திருமால், ஆஞ்சநேயர், காளி தேவி ஆகியோரை, வழிபடுவதற்கு, ஏற்ற நாளாக போற்றப்படுகின்றது. சனி பகவானை பூஜிப்பதற்கும் ஏற்ற நாளான சனிக்கிழமை, பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் ஏற்றதாகும்.
 
ஞாயிறு கிழமைஎன்று நவகிரகத்தின் நாயகனான சூரிய பகவானுக்கு ஏற்ற தினமாகும். ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து, பூஜித்தால் சூரிய தோஷம் விலகி அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி மகிழ்வு பெருகும் என்பகது திண்ணமாகும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments