வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய சிவாலயங்கள் எது தெரியுமா...?

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண் போம்: 
மேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.
 
ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.
 
மிதுனம்: திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்  பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.
 
கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். 
 
சிம்மம்: சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.
 
கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.
 
துலாம்: சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.
 
விருச்சிகம்: திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.
 
மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
 
கும்பம்: சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.
 
மீனம்: வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.