Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

Updated: வியாழன், 14 டிசம்பர் 2017 (17:48 IST)
 
தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து  வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும்.
 
முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில்  இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.
 
அமித்திஸ்ட் கற்கள் சனிக்கு மிகுந்த ப்ரீதி செய்பவை-வெள்ளியில் அணிந்து பயன் பெறலாம்.
 
சனிக்கு ஹோமம் மற்றும் சனி யந்திரம் வைத்து கொள்வது நலம் தரும். கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து  பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.
 
உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து  உண்டு வரவும்.
 
தினசரி தூங்கு முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் அழுத்தி தேய்த்து வரலாம்.
 
தினசரி ஒரு சர்க்ககம் சுந்தர காண்ட பாராயணம் மிகுந்த நன்மை தரும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments