மகாபாரதத்தின் அஸ்வத்தாமன் உயிருடன்?
|
இந்த கோட்டையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கூறினர். ஒருவர் தனது தாத்தா இங்கு அஸ்வத்தாமனை பலமுறை உயிருடன் பார்த்ததாக தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இன்னொருவர் கூறுகையில், அங்குள்ள குளத்தில் தான் மீன் பிடிக்க சென்றதாகவும், அப்போது தன்னை யாரோ குளத்தினுள் தள்ளி விட்டதாகவும் கூறியதோடு, தள்ளி விட்ட நபர் அஸ்வத்தாமன் என்றும் இங்கு யாரும் வருவதை அஸ்வத்தமன் விரும்பவில்லை என்றும் கூறியபோது நமக்கு சற்று ஆச்சரியம் கூடியது. வேறொருவரோ அஸ்வத்தாமனை இங்கு பார்த்தவர்கள் புத்தி பேதலித்துப் போனதாக அதிர்ச்சித் தகவலை அவிழ்த்து விட்டார்.
|
எங்களுடன் கிராம தலையாரி ஹருண் பேக், வழிகாட்டி முகேஷ் காத்வால், மேலும் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அரை மணி நேரத்திற்கு பிறகு கோட்டைக் கதவு திறந்தது... உள்ளே ஒரு கல்லறை... இது பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த்து என்று வழிகாட்டி முகேஷ் கூறினார்.
|
இன்னும் சில தூரம் சென்ற போது குற்றம் செய்பவர்களை தூக்கிலிடுவதற்கான இரண்டு இரும்பு கோணங்கள் இருந்ததைக் கண்டோம். இங்கு மரணத்திற்கு பிறகும் உடல் தொங்கவிடப்படும் பயங்கரத்தை மக்கள் தெரிவித்தனர். பிறகு எலும்புகள் கோட்டையில் உள்ள ஒரு பள்ளதாக்கில் விட்டெறியப்படும் என்பதை தெரிந்து கொண்டோம். அங்கிருந்து சில நிமிடங்களில் புறப்பட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு குப்தேஷ்வர மகாதேவ கோயில் பகுதியை அடைந்தோம். கோயிலை சுற்றிலும் பள்ளத்தாக்காகவே இருந்தது. இந்த பள்ளத்தாக்குகள் ரகசிய பாதைகளை கொண்டது என்று கூறினார்கள். இதன் வழியாக சென்றால் கந்தவா வனம் (கந்தவா மாவட்டம்) வழியாக கோயிலுக்கு செல்லலாம். பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ள இந்த கோயிலினுள் சுழற்படிக்கட்டுகள் வழியே சென்றோம். படிக்கட்டுகளில் ஏறி போவது என்பது உயிரைப் பணயம் வைப்பதற்கு சமம். தவறாக ஒரு அடி வைத்தாலும் மரணம்தான்.
|
இரவு 2 மணியளவில் வெப்ப நிலை கடுமையாக குறைந்தது. எங்கு ஆவிகள் இருக்கிறதோ அங்கு வெப்ப நிலை கடுமையாக குறையும் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. எங்களுடன் வந்தவர்களுக்கு பயம் பிடித்து ஆட்டியது.
|
இந்த நம்பிக்கையின் துவக்கம்
|
ஷ்ருதி அகர்வால்.
அஸ்வத்தாமன் யார் ?
