மே 2ஆம் தேதி நள்ளிரவுக்குள் முடிவுகள்: சத்யபிரதா சாகு அறிவிப்பு

வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:25 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது மூடி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மே இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் என்றும் அன்றைய தினம் நள்ளிரவுக்குள் அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments